For Daily Alerts
Just In
ரயில் கழிப்பறையில் மது கடத்தியவர்கள் கைது
விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் நூதன முறையில் கடத்தப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகர், தலைமைக் காவலர்கள் சதானந்தம், அசோகன் மற்றும் போலீசார் அந்த ரயிலில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் ரயில் பெட்டியில் கழிவறையில் மது பாட்டில்கள் அடங்கிய 3 பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அந்த மது பாட்டில் பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தியவர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Comments
புதுச்சேரி chennai சென்னை ரயில் பறிமுதல் விசாரணை போலீஸ் liquor விழுப்புரம் enquiry illegal recover மதுபானம்
Story first published: Monday, March 16, 2009, 17:36 [IST]