புலிகள் இயக்கத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட ஐ.நா. ஊழியர்
கொழும்பு: ஐநாவில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்தி தங்களது இயக்கத்தில் சேர்த்துக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமைப் பிரிவின் கொழும்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த வாரத்தில் எங்களது ஊழியர் ஒருவரையும் அவரது குடும்பத்தினர் மூவரையும் வலுக்கட்டாயமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தங்கள் இயக்கத்தில் சேர்த்துள்ளனர். இதில் 16 வயது சிறுமியும் அடங்குவார். இவர் எங்களது ஊழியரின் மகளாவார்.
இதனால் ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
பாதுகாப்பு வளையப் பகுதியில் வைத்து அவர்களை புலிகள் இழுத்துச் சென்றுள்ளனர். சிறார்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்துவது சர்வதேச குற்றம். இதனால் இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என புலிகளிடம் கோரியுள்ளோம்.
முன்னதாக இரு வாரங்களுக்கு முன் இன்னொரு ஊழியரையும் புலிகள் தங்கள் இயக்கத்தி்ல் வலுக்கட்டாயமாக சேர்த்தனர். அவரும் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டு்ள்ளது.
இலங்கை செய்து வருவது போர்க் குற்றமே-ஐ.நா:
இதற்கிடையே இலங்கையின் வட பகுதியில் இலங்கை அரசும், படைகளும் செய்து வருவது போர்க் குற்றமே என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் கலாநிதி நவநீதம் பிள்ளை.
ஏற்கனவே இதுதொடர்பாக நவநீதம் பிள்ளை தெரிவித்த கருத்துக்களுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. விடுதலைப் புலிகளின் இணையதளத்தைப் பார்த்து அதன் அடிப்படையில் பேசியுள்ளார் பிள்ளை என கூறியிருந்தது இலங்கை அரசு.
ஆனால் தான் கூறியது சரிதான் என்றும், இலங்கை அரசு செய்து வருவது போர்க் குற்றமே என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் பிள்ளை.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் பேச்சாளர் ராபெர்ட் கொல்விலி கூறுகையில்,
இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள போதும் இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பாக நாம் வெளியிட்ட அறிக்கை சரியானதே.
இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை பலதரப்பு தகவல்களுடன் ஒப்பிட்ட பின்னரே அறிக்கை வெளியிடப்பட்டது.
எனவே கடந்த வெள்ளிக்கிழமை எமது அலுவலகம் வெளியிட்ட தகவல் சரியானது என்றார் அவர்.
1500 தமிழர்கள் தப்பி ஓட்டம்:
இந் நிலையில் வன்னியில் போர் நடந்து வரும் பகுதிகளிலிருந்து 1500 தமிழர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
போர் நடந்து வரும் பகுதிகளிலிருந்து 1500 தமிழர்கள் தப்பி ராணுவ வீரர்களிடம் புகலிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இதுவரை 39 ஆயிரம் பேர் அரசுப் பகுதிகளுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்து.
மேலும், நேற்று விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு அப்பாவிகள் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும், ராணுவம் கூறியுள்ளது.
இதற்கிடையே, அப்பாவிகளைக் குறி வைத்து ராணுவம் தொடர்ந்து பீரங்கித் தாக்குதலை நடத்தி வருவதாக புலிகள் கூறியுள்ளனர். தமிழர்கள் தங்களது பகுதிகளில் விரும்பியேதான் இருக்கின்றனர் என்றும், ராணுவத் தாக்குதலுக்குப் பயந்து இடம் பெயர மறுப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications