ஈரோடு அருகே கடும் சூறாவளி வாழைகள் நாசம்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு அருகே அந்தியூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வீசிய சூறாவளி காற்றால் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள வாழைகள் நாசமடைந்தன.
அந்தியூர் பகுதியை சுற்றி சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். வாழைகள் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. இதனால் விசாயிகள் மகிழச்சியில் இருந்தனர்.
இந் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அந்தியூர், மற்றும் அதனைச் சுற்றியுள்ள ராமங்களில் கடும் சூறாவளி காற்று வீசியதில் லட்சக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
இதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான வாழைகள் நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறிகின்றனர். மேலும் கடும் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகளுக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications