ரயில் உணவுகள் விலை ஏற்றம்-பயணிகள் எரிச்சல்
சென்னை: ரயிலில் வினியோகப்படும் உணவு வகைகளின் விலை தாறுமாறாக ஏற்றப்ட்டு்ள்ளது. சில உணவு வகைகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. வெங்காயம், ஊறுகாய் போன்றவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இது பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளுக்கு இந்திய ரயில்வே தனிக் கட்டணம் வாங்கி கொண்டு உணவுகளை ரயிலிலே வழங்கி வருகிறது. இதற்கான ஆர்டர்களை எடுத்து சென்றுவிட்டு சாப்பாட்டு நேரத்தில் சரியாக கொண்டு வந்து கொடுத்து வருகிறார்கள். இது பல பயணிகளுக்கு உதவிகரமாக உள்லது.
இந் நிலையில் ரயில் உணவு வகைகளின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 11க்கு விற்று வந்த உளுந்த வடை தற்போது ரூ 15 ஆகிவிட்டது.
வடையின் விலையே 15 ஆகிவிட்டால், பிரியாணி விலையை கேட்கவா வேண்டும். முட்டை பிரியாணி ரூ 30 லிருந்து 50 ஆகவும், வெஜிடபிள் பிரியாணி ரூ 25லிருந்து 40 ஆகவும், சிக்கன் பிரியாணி ரூ 40லிருந்து 60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பிரியாணிகளுடன் இணைத்து கொடுக்கப்பட்ட தயிர் வெங்காயம், ஊர்காய் போன்றவைகள் தற்போது வழங்கப்படுவதில்லை.












Click it and Unblock the Notifications