கூட்டணி: 22ம் தேதி முடிவு-டாக்டர் கிருஷ்ணசாமி
மதுரை: வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து வரும் 22ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து வரும் 22ம் தேதி கட்சியி்ன் பொதுக்குழு கூட்டத்த்தில் தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். நான் போட்டியிடப் போகும் தொகுதி குறித்தும் அன்றே முடிவு செய்யப்படும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி பல லட்சம் வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தது.
வரும் மக்களவைத் தேர்தலும் அதை நிரூபிக்கும் வகையில் இருக்கும். தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியால் புதிய தமிழகம் கட்சிக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது என்றார்.