சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை நீடிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. வரும் 2010-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வரை இந்தத் தடை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உள்நாட்டில் சமையல் எண்ணெயின் தேவையை எதிர்கொள்ளவும், விலையைக் கட்டுக்குள் வைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்தது. சூரியகாந்தி எண்ணெய் விலைகூட கிலோ ரூ.100ஐத் தொடுமளவுக்குப் போனது. இதனையடுத்து அனைத்து விதமாக சமயைல் எண்ணெய்களின் ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கப்பட்டது.
இந்தத் தடையால் சமையல் எண்ணெய் விலை ஓரளவு குறைந்துள்ளதாகவும், பெருமளவு குறையும் வரை தடைநீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications