சிதம்பரத்துடன் சிஐஏ தலைவர் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவின் தலைவர் லியோன் பனேடா இன்று டெல்லி வந்தார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய அரசுக்கு உதவும் வகையில் சிஐஏ விசராணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சிஐஏ தலைவர் லியோன் பனேடா இன்று டெல்லி வந்தார். உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இவர்களது பேச்சுவார்த்தை குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதியில் மும்பை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்தியா தொடர்பானவற்றை தங்களுக்கு அளிக்குமாறு சிதம்பரம் கேட்டுகொண்டார். அதேபோல் சிஐஏ தலைவரும் இந்தியாவுக்கு தெரிந்த அமெரிக்கா தொடர்பான விஷயங்களை கேட்டுள்ளார். அவர்கள் இருவரும் தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தானின் நிலையற்ற அரசியல் குறித்து பேசினர்.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இன்னும் நெருங்கி வருவது என முடிவெடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சிஐஏ தலைவர் பனேடா, ஐபி தலைவர் ராஜீவ் மாதுர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன், ரா அமைப்பு தலைவர் கே.சி.வர்மா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பனேடாவுடன் இந்தியாவுக்கான அமெரிக்காவின் இடைக்கால தூதர் பீட்டர் பர்லேவும் வந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+