ஜார்க்கண்டில் லாலுவுக்கு 2 சீட் ஒதுக்கி காங் பதிலடி
டெல்லி: பீகாரில் தங்களுக்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சிக்கு காங்கிரஸ் ஜார்க்கண்டில் 2 தொகுதிகள் ஒதுக்கி பதிலடி கொடுத்துள்ளது.
சமீபத்தில் பீகாரில் உள்ள 40 நாடாளுமன்ற இடங்களுக்கான தொகுதி பங்கீட்டை ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு அறிவித்தார். அதில் தங்கள் கட்சி 25, பஸ்வான் கட்சி 12 மற்றும் காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்தார். தேசிய கட்சியான தங்களுக்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைத்தது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் மூலம் லாலுவுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டது. இதையடுத்து இங்கு சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சாவுடன் கூட்டணி உடன்பாட்டை முடிவு செய்துள்ளது. இங்கு லாலுவும் இவர்கள் கூட்டணியில் இருந்த போதும் அவரிடம் கலந்து ஆலோசிக்கவில்லை.
ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 7, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 5 இடங்களிலும் போட்டியிடும் என்றும், எஞ்சிய 2 தொகுதிகள் லாலு பிரசாத் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநில் காங்கிரஸ் கட்சி தலைவர் கேசவ் ராவ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு 6, லாலு கட்சிக்கு 3 என பேசப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் தங்களுக்கு ஒன்றை அதிகரித்து, லாலுவுக்கு ஒன்றை குறைத்துள்ளது. ஆனால், இந்த தொகுதி உடன்பாட்டை லாலு ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை.
-
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications