For Daily Alerts
Just In
முதல்வருக்கு 'பாராட்டு'- ஆந்திர டிஜிபி டிரான்ஸ்பர்
டெல்லி: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைப் புகழ்ந்து பேசிய அம்மாநில டிஜிபியை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் அம்மாநில டிஜிபி யாதவ் சமீபத்தில் பேசினார்.
அப்போது முதல்வர் ராஜசேகர ரெட்டியை புகழ்ந்து பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறின.
இதையடுத்து டிஜிபி யாதவை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு நேற்று உத்தரவிட்டது. மேலும், புதிய டி.ஜி.பி. யாக நியமிப்பதற்கு போலீஸ் அதிகாரிகள் பட்டியலை வெள்ளிக்கிழமைக்குள் அளிக்கவும் அது உத்தரவிட்டுள்ளது.
Comments
transfer இடமாற்றம் andhra ஆந்திரா முதல்வர் dgp டிஜிபி rajasekara reddy ராஜசேகர ரெட்டி yadav யாதவ் election 2009 தேர்தல் 2009
Story first published: Thursday, March 19, 2009, 15:27 [IST]