For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய எல்லைக்குள் ராணுவம் மீது பாக். திடீர் துப்பாக்கிச் சூடு

By Sridhar L
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில், இந்திய நிலைகள் மீது திடீரென பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தின. இதில் ஒரு வீரர் படுகாயமடைந்தார்.

கடந்த ஐந்து மாதங்களில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட மிகப் பெரிய அத்துமீறல் இது.

நேற்று இரவு 10 மணிக்கும், இன்று அதிகாலை 3 மணிக்கும் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மொத்தம் 2000 முறை இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தானிய படைகள் சுட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டில், 10-வது ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர் லேன்ஸ் நாயக் பிரகாஷ் சிங் படுகாயமடைந்தார்.

பாகிஸ்தானுக்குப் பதிலடியாக இந்தியத் தரப்பும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X