பீகாரில் லாலு - காங் கூட்டணி உடைந்தது - 37 தொகுதிகளில் காங். போட்டி

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் வெறும் 3 சீட்களை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கினார் லாலு பிரசாத் யாதவ்.
இதனால் கடுப்பான காங்கிரஸ் தற்போது அதிரடியாக அங்கு 37 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழு தலைவர் சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், 37 சீட்களில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அங்கு கூட்டணி தர்மம் மீறப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
இப்போது எங்களுக்கு லாலுவுடன் கூட்டணி இல்லை என்றார் ஷிண்டே.
லாலு மச்சான் காங்கிரஸில் ..
இதற்கிடையே முன்னாள் ஆர்.ஜே.டி தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மைத்துனருமான சாது யாதவ் என்கிற அனிருத் பிரசாத் யாதவ், காங்கிரஸில் இணைந்துள்ளார்.
டெல்லி வந்த அவர் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைவதை அறிவித்தார்.
லாலுவின் மனைவி ராப்ரியின் சகோதரர்தான் இந்த சாது யாதவ். இவர் தற்போது கோபால்கஞ்ச் தொகுதி எம்.பியாக உள்ளார். அவருடன் பனகா எம்.பி. கிரிதரி யாதவ், முன்னாள் அமைச்சர் ராமாய் ராம் ஆகியோரும் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
பாஸ்வானிடம் லாலு சரணடைந்து விட்டார் என்று கூறி ராஷ்டிரிய ஜனதாதளத்திலிருந்து விலகியுள்ளார் சாது யாதவ்.












Click it and Unblock the Notifications