சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 16 இந்தியர்கள் விடுதலை
டெல்லி: சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிக்கப்பட்டு விட்டது. அதிலிருந்த 16 இந்தியர்களும் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாயிலிருந்து மொகாதிஷுவுக்கு அல் ரபீக் என்ற சரக்குக் கப்பல் வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் 16 இந்தியர்கள் இருந்தனர்.
நேற்று காலை இந்திய நேரப்படி 10.30 மணிக்கு இந்தக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
கப்பலில் அரிசி, ரீபைன்ட் எண்ணை, கோதுமை மற்றும் பிற சரக்குகள் இருந்தன.
கடத்தல் குறித்து இந்திய கடற்படைக்குத் தகவல் போனது. இதையடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியக் கடற்படை போர்க் கப்பல் தேடுதல் வேட்டையில் இறங்கியது.
இந்த நிலையில் நேற்று மாலையில் கப்பலை கொள்ளையர்கள் விடுவித்து விட்டனர். ஆனால் அதற்கு முன்பாக கப்பலில் இருந்த பொருட்களின் ஒரு பகுதியை அவர்கள் திருடிக் கொண்டனர். கப்பலின் எரிபொருளையும் திருடி விட்டனர். ஊழியர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறித்துக் கொண்டனர்.
கப்பலில் இருந்த 16 இந்தியர்களும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவின் பன்ட்லேண்ட் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 1500 கொள்ளையர்கள் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் இவர்கள் 150க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கடத்தி அட்டூழியம் செய்துள்ளனர். பல கோடி பணத்தையும் இவர்கள் பறித்துள்ளனர்.
சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்திலிருந்து தங்களது நாட்டு கப்பல்களைக் காப்பாற்ற இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஏடன் வளைகுடா பகுதியில் போர்க் கப்பல்களை நிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications