தூத்துக்குடி மேயர் பதவிக்கு புதிய ஆபத்து !
தூத்துக்குடி: தூத்துக்குடி மேயர் கஸ்தூரி தங்கம் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருப்பவர் கஸ்தூரி தங்கம்.
இவர் கடந்த 1996 ம் ஆண்டு முதல் 2001 ம் ஆண்டு வரை கஸ்தூரி 3 -வது வார்டு உறுப்பினராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் 28-2-2009 அன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் நகராட்சி தணிக்கைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில் அப்போதைய நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் உள்பட 46 கவுன்சிலர்கள் வருவாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தது.
இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த சத்யா லட்சுமணன் முதல் கட்டமாக மேற்கண்ட விவரங்களை தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் தகவல்களை பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய கஸ்தூரி தங்கம் தனது பிரமாணப்பத்திரத்தில் இதை தெரிவிக்கவில்லை.
எனவே, அவர் தற்போது வகித்து வரும் 3-வது வார்டு உறுப்பினர் பதவியை அரசே முன் வந்து பறிக்க வேண்டும்.
அடுத்த கட்டமாக தமிழக அரசே தூத்துக்குடி மேயர் பதவியையும் நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதியை பெறுவோம் என்கிறார்.












Click it and Unblock the Notifications