40 தொகுதிகளுக்கும் இன்று வேட்பாளர்களை தேர்வு செய்கிறார் விஜயகாந்த்
சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பி மனு செய்துள்ளவர்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னையில் நேர்காணல் செய்யவுள்ளார்.
மக்களுடன்தான் கூட்டணி, அடையாளம் காட்டுவோருக்கு வாக்களியுங்கள் என்று சூட்சுமமாக காஞ்சிபுரத்தில் பேசினார் விஜயகாந்த். இதன் மூலம் அவர் தனித்துப் போட்டியிடப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இருப்பினும் சில முக்கிய தொகுதிகளில் அவர் காங்கிரஸ் வேட்பாளர்கள ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
அதைத்தான், நான் அடையாளம் காட்டுவோருக்கும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், 40 தொகுதிகளுக்கும் அவர் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவுள்ளார். இதற்கான நேர்காணல் இன்று சென்னையில் தொடங்குகிறது.
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
23-ந்தேதி காலை 9 மணிக்கு 14 தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.
24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி (புதன்கிழமை) 12 தொகுதிகளுக்கும் நேர் காணல் நடக்கிறது.
நேர்காணலுக்கு வருபவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்ற பகுதி, தங்கள் வயது பற்றிய சான்றிதழ், தங்கள் பெயரில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் அது குறித்த விவரம் ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications