ஒரு மாதத்திற்குப் பின்னர் பணிக்குத் திரும்பினர் வக்கீல்கள்
சென்னை: கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் இன்று முதல் பணிக்குத் திரும்பினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட பெரும் மோதலைத் தொடர்ந்து காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நீதிமன்றப் பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில், சென்னை கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்ரமணி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது.
இதை வக்கீல்கள் வரவேற்றனர். மேலும், தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிடுவதாகவும், திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்புவதாகவும் அறிவித்தனர்.
அதன்படி இன்று காலை வக்கீல்கள் பணிக்குத் திரும்பினர். சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை மற்றும் பிற நீதிமன்றங்களில் இன்று காலை வக்கீல்கள் பணிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து இயல்பு நிலை திரும்பியது.
சட்டக் கல்லூரிகளும் திறப்பு:
அதேபோல கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த தமிழக சட்டக் கல்லூரிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வகுப்புகளுக்குச் சென்றனர். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் பலவகையான போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சட்டக் கல்லூரிகள் மூடப்பட்டன.
50 நாட்களாக வகுப்புகள் நடைபெறாததால், மே மாதம் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications