திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு தடை இல்லை!

சென்னையைச் சேர்ந்த இளைஞர் இந்து சங்கம் என்ற அமைப்பு இதுதொர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
அதில், திமுகவுக்கு தேர்தல் சின்னமாக உதயசூரியன் சின்னம் உள்ளது. இப்படி சின்னமாக உதயசூரியனை ஒதுக்கியது சட்டவிரோதமாகும்.
உதயசூரியன் சின்னம் மத அடையாளத்தைக் குறிப்பதாகும். எனவே இந்த சின்னத்தை திமுகவுக்கு ஒதுக்கியது மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பானதாகும். எனவே இந்த சின்னத்தை திமுக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் வி.கே.பிஜூ ஆஜரானார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த வாதத்தை ஏற்க மறுத்து விட்டது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், 1952ம் ஆண்டு திமுகவுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. அதுகுறித்து இப்போது மனுதாரர் கேள்வி கேட்பது ஏன் என்று புரியவில்லை.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு சின்னமும் ஏதாவது ஒரு வகையில் மதத்துடன் தொடர்புடையாதாகவே உள்ளது.
இந்தியாவில் பசு, ஆடு உள்ளிட்டவை மதத்துடன் தொடர்புடையதாகவே உள்ளன. எனவே உதயசூரியனை தடை செய்ய வேண்டும் என்று கோர முடியாது என்றனர்.
இதையடுத்து தனது மனுவை வாபஸ் பெறுவதாக வக்கீல் பிஜூ தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்து வழக்கை பைசல் செய்து விட்டனர்.












Click it and Unblock the Notifications