குழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை
போடி: போடி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
போடியை அடுத்த முண்டல் கிராமத்தில் சேர்ந்தவர் மாரிச்சாமி (26). இவரது மனைவி இந்திராணி (23). இவர்களது குழந்தைகள் ராஜேஷ் (5), மகேஷ் (3).
இந் நிலையில் மாரிச்சாமி மனைவி இந்திராணிக்கும் இளைஞர்கள் சிலருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக பேச்சு எழுந்தது. இதனால் மாரிச்சாமி ஊரில் இருப்பவர்கள் தவறாக பேசுகிறார்கள் என கூறி இந்திராணியை கண்டித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வெறுத்து போன மாரிச்சாமி, தனது குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்றார். பின்னர் தானும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்திராணியிடமும், இளைஞர்கள் சிலரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.