என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் சென்னை வருகை

மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையை நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த நகரங்களில் ஒன்று சென்னை.
இந்த நிலையில் சென்னை நகரின் உயர் பாதுகாப்பு பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றின் பாதுகாப்புத் தன்மை, சுற்றுச்சூழல் குறித்து அறிந்து கொள்ளவும், 75 கமாண்டோ வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
விமானப்படை விமானம் மூலம் கமாண்டோக்கள் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். வந்தவுடனேயே அவர்கள் தங்களது பணியைத் தொடங்கினர்.
முதல் பணியாக கல்பாக்கம் சென்ற அவர்கள் அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தனர்.
வரும் நாட்களில் சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய இடங்கள், கட்டட வளாகங்கள், பாதுகாப்பு வளையப் பகுதிகளை சுற்றிப் பார்த்து ஆய்வு செய்யவுள்ளனர்.
கல்பாக்கத்திற்கு மீண்டும் சென்று ஆய்வு நடத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது.
வண்டலூரில் என்.எஸ்.ஜி. முகாம்..
சென்னையில்தான் என்.எஸ்.ஜி. படையின் பிராந்திய அலுவலகம் அமையவுள்ளது. 2 மாதங்களுக்கு முன்புதான் தமிழக அரசு அதிகாரிகளும், என்.எஸ்.ஜி அதிகாரிகளும் அல்மாத்தி, எருமைவெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
இறுதியில் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள நெற்குன்றம் என்ற இடத்தில் 90 ஏக்கர் நிலம் முடிவு செய்யப்பட்டது.
விமான நிலையம், முக்கிய தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதலில் 1000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என என்.எஸ்.ஜி. தரப்பில் கோரப்பட்டது. இருப்பினும் தற்போதைக்கு 90 ஏக்கர் நிலம் முடிவாகியுள்ளது. போகப் போக என்.எஸ்.ஜி. படையின் தமிழக பிராந்திய பிரிவு மேலும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.எஸ்.ஜி பிரிவு முகாம் அமையவுள்ள நெற்குன்றம் பகுதி அருமையான சாலை வசதியுடன் கூடியது. வண்டலூர் உயிரியில் பூங்காவையொட்டி இது அமையவுள்ளது. இதற்கு எதிரேதான் காவல்துறை பயிற்சி அகாடமி உள்ளது.
தற்போது பார்க்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகே இரண்டு பெரிய ஏரிகள் உள்ளன. குடிநீர்ப் பிரச்சினை அறவே கிடையாது. இப்பகுதியில் சிறிய மலைக்குன்றும் உள்ளது. எனவே துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை.
இப்படிப் பல வகைகளிலும் இது சாதகமானதாக இருந்ததால்தான் இந்த இடத்தை என்.எஸ்.ஜி. தேர்வு செய்துள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications