தொடர்ந்து மூன்றாவது நாளாக சாதகமான வர்த்தகம்!
மும்பை: காலையில் மந்தமாகத் துவங்கிய இந்திய பங்குச் சந்தை வர்த்தகம், பிற்பகலுக்குப் பின் பழைய வேகத்தை எட்டிப் பிடித்தது. இதனால் வர்த்தகம் முடியும் நேரத்தில் சென்செக்ஸ் 196 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
நிப்டியிலும் இன்று சாதகமான சூழலே நிலவியது. ரியல் எஸ்டேட், பெட்ரோலிய்ப பொருள்கள் மற்றும் உலோகத் துறை சார்ந்த பங்குகள் நல்ல விலைக்குப் போயின.
டாடா பவர், ஏசிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனஙக்ளின் பங்குகல் நல்ல லாபத்தில் கைமாறின.
என்டிபிசி மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் அதிக நஷ்டத்தைச் சந்தித்தன. ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ரான்பாக்ஸி நிருவனங்களின் பங்குகளும் நஷ்டத்திலேயே கைமாறின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 196 புள்ளிகள் உயர்ந்து 9667-ல் நிலை பெற்றது. நிப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 2884-ல் நிலைபெற்றது.












Click it and Unblock the Notifications