ராஜஸ்தான் தலைமை நீதிபதியாகும் முகோபாத்யாயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முகோபாத்யாயா ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலைத் தடுக்க தவறி விட்டதாகவும், வக்கீல்களிடம் மிகவும் மென்மையாக நடந்து கொண்டார் எனவும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து முகோபாத்யாயா இடமாற்றம் செய்யப்படலாம் என பேச்சு எழுந்தது. இந்த நிலையில், நீதிபதி முகோபாத்யாயா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது தீபக் வர்மா உள்ளார். அவரும், ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பல்பிர் சிங் செளகானும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாகின்றனர்.

இதையடுத்து ராஜஸ்தான் தலைமை நீதிபதியாக முகோபாத்யாயா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சுப்ரீம் கோர்ட் காலோஜியம் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+