2600 தமிழர் பலி-ஐநாவை கேள்வி கேட்கும் இலங்கை

Subscribe to Oneindia Tamil

UN Logo
கொழும்பு: வன்னியில் இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் 2600 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் என்று ஐநா.விடம் இலங்கை கேட்டுள்ளது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள ஐ.நா. உறைவிடம் மற்றும் மனித உரிமை ஒருங்கிணைப்பாளர் நீல் பூனேவிடம், இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா விளக்கம் கேட்டுள்ளார்.

இந்த அலுவலகம் சமீபத்தில் இலங்கை: மக்கள் உயிர்ப்பலிகள், வன்னி ஒரு பார்வை - மார்ச் 2009 என்ற அறிக்கையை வெளியிட்டது. அதில், ராணுவத் தாக்குதலில் 2683 பேர் கொல்லப்பட்டனர், 7241 பேர் காயமடைந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், எங்களது அலுவலகம் தயாரித்த இந்த அறிக்கை, நன்கொடையாளர் நாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். தனிப்பட்ட முறையில் உயிர்ப்பலிகளின் சரியான அளவு குறித்து உறுதிப்படுத்த முடியாது.

மேலும், 2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில், பலியானவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவும் இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் இலங்கை அரசு, ஐ.நா.வின் அறிக்கைக்கு விளக்கம் கேட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+