தேர்தல் பாதுகாப்பு-டிஜிபி ஜெயின் நெல்லை வருகை
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டிஜிபி ஜெயின் நாளை நெல்லை வருகிறார்.
தமிழ்நாட்டில் வரும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்தும் தமிழகம் முழுவதும் பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிந்து தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை செய்து வருகிறது.
இந்நிலையில் டிஜிபி ஜெயின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
நாளை 27ம் தேதி நெல்லை வரும் அவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதில் தென்மண்டல ஐஜி சஞ்சீவ் குமார், டிஜிபி கண்ணப்பன், மாநகர கமிஷனர் மஞ்சுநாதா, தூத்துக்குடி எஸ்பி தீபக் டமோர், கன்னியாகுமரி எஸ்பி கபில்குமார் சரத்கார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்தில் 3 மாவட்ட தேர்தல் பாதுகாப்பு குறித்தும், பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications