கொளத்தூர் மணி: குண்டாஸ் ஏன்?-அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியை விடுதலை செய்யக்கோரி அவரது தம்பி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பெரியார் திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது. பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் திண்டுக்கல்லில் 20.2.2009 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஈழம் எரிகிறது' என்ற தலைப்பில் கொளத்தூர் மணி பேசினார்.
இந்திய இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகவும் கொளத்தூர் மணி பேசியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி அவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யும்படி கொளத்தூர் மணி திண்டுக்கல் 2-வது நீதித்துறை நடுவர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். எனவே, ஜாமீன் கேட்டு திண்டுக்கல் செசன்ஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நிலுவையில் இருக்கும்போதே கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடந்த 10-ந் தேதி பிறப்பிக்கப்பட்டது.
ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட அதிகாரம் கிடையாது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசும் ஒருவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய முடியாது.
இதுகுறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதான விவரத்தை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை.
போதுமான குற்றச்சாட்டுகள் இல்லாமல் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது அரசியல் சட்டம் 21 மற்றும் 22-வது பிரிவுக்கு எதிரானது. ஆகவே, எனது சகோதரர் கொளத்தூர் மணியை விடுதலை செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை நேற்று நீதிபதிகள் தர்மாராவ், சுப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
பின்னர் நான்கு வாரங்களுக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசு, திண்டுக்கல் ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப பெஞ்ச் உத்தரவிட்டது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications