சேலத்திலிருந்து வந்த ரூ.153 கோடி செல்லா நோட்டு!
சென்னை: ரூ.153 கோடி கிழிந்த, கறைபடிந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் மிக பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
செல்லாத நோட்டுகளை வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த நோட்டுகளின் எண்களை ரிசர்வ் வங்கி குறித்துக் கொண்டு அதை அழித்துவிடும். பின்னர் அந்த எண்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும்.
இந்த வகையில் சேலம் பகுதியில் உள்ள வங்கிகளில் சேகரிக்கப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுக்கள் ரூ.153 கோடி அளவுக்குக் குவிந்தன. பல்வேறு வங்கிகள் இதனை சேலம் பகுதி ஸ்டேட் வங்கி தலைமையகத்தில் ஒப்படைத்திருந்தன.
இதை சென்னையில் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைப்பதற்காக பாதுகாப்பாக சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டன. இதற்காக அந்த ரயிலில் இரு தனி சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த அந்த ரயில் பெட்டிகளை ரயில்வே போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.
பி்ன்னர் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் அந்த நோட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நோட்டுகள் இயந்திரம் மூலம் கூழாக அரைக்கப்படும்.
முன்பு செல்லாத நோட்டுகளை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி எரித்து வந்தது. ஆனால் காற்று மாசுபடுவதாக புகார் எழுந்ததால் இப்போது அவை அரைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications