For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம்

By Sridhar L
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் பழவூர் அருகே 7 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பழவூர் அருகேயுள்ள கூட்டப்புளியை சேர்ந்தவர் டெனில். இவரது மகள் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 7 வயது சிறுமியான ராணி அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள்.

நேற்று ராணி பள்ளிக்கு சென்றுவிட்டு அதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் தனது அண்ணன் அஜயுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது அதே ஊரை சேர்ந்த பெலி கான் என்பவன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து, ராணியை கடத்திச் சென்றான்.

ராணியின் அண்ணன் அஜய் தடுத்தும் நிற்காமல் சென்று விட்டான். நடந்த சம்பவத்தை அஜய் வீட்டில் கூறினான். உடனே ராணியின் பெற்றோரும், உறவினர்களும் அவளை தேடினர். அக்கம் பக்கத்தில் பல இடங்கலில் தேடியும் ராணி கிடைக்கவில்லை. இதனிடையே இரண்டு மணி நேரம் கழித்து வாலிபர் பெலி கான், ராணியை வீட்டுக்கு அருகே கொண்டு வந்துவிட்டு சென்றான்.

சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது வாலிபர் பெலி கான் அவளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுபற்றி ராணியின் தாய் ஜூலியட், பழவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெலி கானை தேடி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X