பெண் கற்பழித்து கொலை- நெல்லை திமுக பிரமுகர் கைது
நெல்லை: தோட்டத்தில் கிடந்த பிணத்தை ஆற்றில் தூக்கி போட்டு தடயத்தை மறைக்க முயன்ற குற்றத்துக்காக நெல்லை திமுக பிரமுகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அச்சம்புதூர் அருகில் கரிசல்குடியிருப்பு விலக்கு உள்ளது. இந்த இடத்துக்கு அருகில் அனுமன் நதி ஓடுகிறது. இதில் இளம் பெண்ணின் உயிரற்ற உடல் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் விசாரணையை துவக்கினர். பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணை பலர் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
அதே சமயத்தில் அவர் கேரளாவை சேர்ந்த விபச்சார அழகியாக இருக்கலாம் என்றும், அதிக பணம் கேட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக போலீசார் அருகிலிருந்த தோப்பில் பிணத்தை எரித்ததற்கான சுவடுகளை கண்டுபிடித்தனர். இதையடுத்து தோப்பின் உரிமையாளர் சுப்பையா (70) என்பவரை விசாரி்த்தனர். அப்போது அவர் அந்த பிணம் தோப்பில் கிடந்தது என்றும், போலீஸ் விசாரணைக்கு பயந்து தன்து மகன் ராஜ் நாராயணன் (31), உறவினர்கள் பிச்சையா (39), அப்பகுதி திமுக செயலாளர் ராஜராஜன் (39) ஆகிய 4 பேரும் சேர்ந்து பிணத்தை ஆற்றில் தூக்கிப்போட்டதாகவும் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் தடயத்தை மறைக்க முயன்றதாக கூறி அந்த 4 பேரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். போலீசார் அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications