1 தொகுதி கிடைத்தாலும் போதும்... விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையி்ல்,
தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளுமே தேமுதிகாவை அழிக்க நினைக்கின்றன. நல்லவர்களோடு கூட்டணி வைப்பதில் தவறில்லை.
ஆனால் பணத்துக்காக தேர்தல் கூட்டணி மாறுகிறார்கள். தேர்தலில் தேமுதிகவினர் தீவிரமாக உழைக்க வேண்டும். சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்படுவார்கள்.
பணம் கொடுக்கிறவர்களை மககள் அடித்து விரட்ட வேண்டும். ஒரு எம்பி கிடைத்தால் கூட மத்திய அரசை ஆட்டி வைக்கிற அளவுக்கு தேமுதிக இருக்கும். அதற்கான வாய்ப்பை தாருங்கள்.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே காங்கிரஸ், பாஜகவுடன் மாறி, மாறி கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் மக்களுக்கு எதுவம் செய்யவில்லை.
மாநில கட்சிகளை நம்பிதான் தேசிய கட்சிகள் என்ற நிலை வந்துவிட்டது. ஒரு மாநிலத்தில் காங்கிரசுக்கு 3 சீட்தான் கொடுத்துள்ளனர். எனவே தேசிய கட்சிகளின் நிலை என்ன என்று சிந்தித்து பார்க்க வேண்டும். தேசிய கட்சிகள் சரியில்லை என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications