சென்னையில் 200 குடிநீர் தொட்டிகள் தீக்கிரை
சென்னை: சென்னையில் இன்று காலை நடந்த பயங்கர தீவிபத்தில் 200 மாநகராட்சி குடிநீர் தொட்டிகள் எரிந்து சாம்பலாயின.
இவை அனைத்தும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வைக்கப்படவிருந்த பிளாஸ்டிக் தொட்டிகள் ஆகும்.
புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் சென்னை மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இந்த குடிநீர்த் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை திடீரென இங்கு தீவிபத்து ஏற்பட்டு. இதில் பிளாஸ்டிக் தொட்டிகள் அனைத்தும் தீக்கிரையாகி விட்டன.
கொழுந்து விட்டு எரிந்த தீயை 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சேர்ந்து போராடி அணைத்தன. மொத்தம் 200 தொட்டிகள் எரிந்து உருகிப் போய் விட்டன.
இது சதிச் செயலா அல்லது தற்செயலான விபத்தா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி பேப்பர் மில்லில் தீ விபத்து!:
சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் உள்ள பேப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
சிவகாசி அருகே உள்ளது சுக்கிரவார்பட்டி. இங்கு
ஸ்ரீபதி பேப்பர் போர்டு என்ற தொழிற்சாலை இயங்கி வருகின்றது.
இங்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பேப்பர் கழிவுகள் குவில் குவியலாக வைக்கப்பட்டுள்ளது.
இதில் இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட மின்கசிவால் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லில் ஏற்பட்ட தீயை 6 தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி அணைத்தனர்.
தீயினால் பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் நாசமடைந்ததாக கூறப்படுகின்றது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications