டெல்லி சீக்கியர் படுகொலை - தப்புகிறார் ஜெகதீஷ் டைட்லர்?
டெல்லி: இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர் மீதான இறுதி விசாரணையை சிபிஐ டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில் டைட்லர் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூடப்பட்ட உறையில் வைத்து இந்த விசாரணை அறிக்கையை பெருநகர மாஜிஸ்திரேட் ராம் லால் மீனாவிடம் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. ஏப்ரல் 2ம் தேதி இந்த அறிக்கையை டெல்லி கோர்ட் பிரித்துப் படிக்கவுள்ளது.
டெல்லி வன்முறைக்கு டைட்லரே காரணம் என்பது குற்றச்சாட்டாகும். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தவரின் சாட்சியம் நம்பும்படி இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டைட்லருக்கு காங்கிரஸ் கட்சி வட கிழக்கு டெல்லி தொகுதியில் சீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங் என்பவர் டைட்லருக்கு எதிராக சாட்சியம் அளித்திருந்தார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் முன்பு ஜஸ்பீர் சிங் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதில், 1984ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, தனது தொகுதியில் சீக்கியர்களைப் படுகொலை செய்யுமாறு டைட்லர் உத்தரவிட்டதாக கூறியிருந்தார்.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
டெல்லிக்கு இனி கூப்பிடாதீங்க.. சிபிஐ, ஓய்வு பெற்ற நீதிபதிக்கு விஜய்யிடம் இருந்து பறந்த கடிதம்.. காரணம் என்ன? -
எப்படி என் ராஜதந்திரம்.. ஈரான் அதிபருக்கு போனைப் போட்ட மோடி! களத்தில் இறங்கிய இந்திய கடற்படை! சுபம்! -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
ஸ்டாலின் நேரடியாக கேட்டுக்கொண்டார்.. சிபிஐ 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது.. வீரபாண்டியன் விளக்கம்! -
பாஜக உள்ள வந்துரும்ங்க தோழர்.. சிபிஐக்கு 5 தொகுதியை தள்ளிவிட்ட திமுக! 2021ல் என்ன நடந்தது தெரியுமா? -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
Senthil Balaji: கரூர் சம்பவம்.. 6 மணி நேரம் நடந்த விசாரணை.. சிபிஐ கேட்டது என்ன? செந்தில் பாலாஜி கொடுத்த பதில் -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி












Click it and Unblock the Notifications