தமிழர் ஓட்டு-குறி வைக்கும் கர்நாடக பாஜக
ஷிமோகா: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் கர்நாடகவில் இருக்கும் தமிழர்கள் பிரச்சினை குறித்து ஆலோசித்து தீர்வு காணப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.
ஷிமோகாவில் மாவட்ட தமிழர் மாநாட்டை கர்நாடக முதல்வர் எடியூரப்பா துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
மாநில கட்சிகளின் பிறப்பிடமாக தமிழகம் விளங்குகிறது. ஜெயலலிதா, ரஜினிகாந்த், நாகேஸ் மற்றும் அர்ஜூன் போன்ற கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்குகின்றனர்.
நாமெல்லாம் சகோதரர்கள்...!
திராவிட மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் பேசும் அனைவரும் சகோதரர்கள். தமிழைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதில் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. மற்ற மொழிகளை நேசி, உனது மொழியில் உயிர் வாழ் என காந்தியடிகள் கூறியுள்ளார். தமிழர்கள் தன்மானம் மிக்கவர்கள், தைரியசாலிகள், உண்மையானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழர்களில் பலர் ஏழைகளாக் இருந்தாலும், உழைத்து வாழ்ந்து வருகிறார்கள். குழந்தைகளின் கல்வி அறிவில் அக்கறை காட்டுங்கள்.
கர்நாடகவில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பாக்யலட்சுமி என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதை தமிழ் தாய்மார்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தனது பெண் குழந்தை படித்து நல்ல வளர்ச்சி காண்பதில் தாய்மார்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
ஷிமோகா இந்த மாநாட்டில் பங்கேற்க ஆயிரக்கணக்கான தமிழர்கள் வந்துள்ளார்கள். இது கர்நாடக வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் சமுதாயம் முன்னேறும். பிரச்சினை வரும் சமயத்தில் நாம் அனைவரும் ஒரு தாய்-பிள்ளைகளாக பழக வேண்டும்.
மழை பெய்தால், காவிரி பிரச்னை வராது. மழை பெய்யவில்லை என்றால் தான் பிரச்சனை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறேன். கர்நாடகத்தில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என இந்த மேடையில் உறுதியளிக்கிறேன் என்றார் எடியூரப்பா.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தெலுங்கு மொழி பேசுவோரின் வாக்குகளும் காங்கிரசுக்கு தமிழர்களின் வாக்குகளும் கிடைத்தன.
இந்த மக்களவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறி வைத்துள்ளது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications