ஸ்ரீபெரும்புதூர் தேமுதிக வேட்பாளரான முன்னாள் பாமக வக்கீல்
Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக இருக்கிறார் அருண் சுப்ரமணியம். பி.எஸ்.சி. பி.எல். படித்துள்ள அருண் சுப்ரமணியம், முன்பு பாமகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் ஆவார்.
பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்து மாவட்டச் செயலாளரானார். தற்போது தேமுதிகவின் வேட்பாளராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
54 வயதாகும் அருண் சுப்ரமணியம் தொண்டர்களைத் திரட்டி வேலை வாங்கும் திறமை படைத்தவர். விஜயகாந்த்தின் செல்வாக்கும், மக்கள் மாற்றத்தை விரும்புவதும் தன்னை ஜெயிக்க வைக்கும் என்று நம்புகிறார் அருண் சுப்ரமணியம்.












Click it and Unblock the Notifications