சென்னை: காங். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை: தமிழ்நாடு மாநில் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தலைமறைவானது. இதில் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக இருப்பவர் பிரகாஷ். இவரது வீடு சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜெகநாதபுரத்தில் இருக்கிறது. நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூக்கி கொண்டிருந்தார்.
இந்நிலையில் இரவு சுமார் 2 மணிக்கு மர்ம கும்பல் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. பிரகாஷ் எப்போது பால்கனியில் தான் உறங்குவார் என்ற எண்ணத்தில் அவரை குறிவைத்து அந்த கும்பல் பால்கனியில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது.
அதில் பெட்ரோல் பால்கனி சுவர் மற்றும் தரையில் சிதறி வேகமாக பரவியது. அந்த அறை முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்நிலையில் நன்றாக தூங்கி கொண்டிருந்த பிரகாஷ் சில மணி நேரங்கள் கழித்து தான் வீட்டில் கருகிய வாசனை வருவதை கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து பால்கனியை சென்று பார்த்த போது அந்த அறை தீப்பிடித்து எரிவதையும், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதுக்கு அடையாளமாக பாட்டில் சிதறல்கள் கிடப்பதையும் கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து சேத்துப்பட்டு போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ராஜாமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சமயத்தில் வீட்டு பால்கனியில் யாரும் தூங்கவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
தேர்தல் நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் வேறு கட்சியினர் யாராவது இதில் ஈடுபட்டிருப்பார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்குமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!











Click it and Unblock the Notifications