தமிழகத்தில் புலிகளுக்கு பெரும் ஆதரவு-என்டிடிவி கருத்துக் கணிப்பு
டெல்லி: தமிழக மக்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டும் என கூறியுள்ளதாக என்டிடிவி கருத்துக் கணிப்பு கூறுகிறது.
என்டிடிவி-ஜிஎப்கே மோட் இணைந்து நடத்திய இந்தக் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது..
விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டுமா என்ற கேள்விக்கு 66 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர்.
அடுத்த முதல்வராக யார் வருவார்கள் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு சம அளவிலான ஆதரவு காணப்படுகிறது.
கருணாநிதி முதல்வராவார் என்று 41 சதவீதம் பேரும், ஜெயலலிதா முதல்வராவார் என்று 40 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜிவ் காந்தி கொலைக்குப் பின் இந்த அளவுக்கு புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடைத்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
மக்களவைத் தேர்தல் நேரத்தில் புலிகளுக்கு நிலவும் ஆதரவைப் பார்த்தால் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு பெரிய 'ஆப்பு' காத்துக் கொண்டுள்ளதை உணர முடிகிறது.












Click it and Unblock the Notifications