சென்னை, மும்பை தாஜ்: பாகிஸ்தானிலிருந்து மிரட்டல் இ-மெயில்
சென்னை: சென்னை மற்றும் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இருந்து இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டலையும், அதில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரையும் முக்கிய இலக்காக வைத்து இந்த தாக்குதலை நடத்தினர்.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி சென்னை கோவளம் கடற்கரைக்கு அருகில் இருக்கும் தாஜ் ஹோட்டலுக்கு மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது மிரட்டல் இ-மெயிலும் வந்துள்ளது.
அதில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த ஹோட்டலை தகர்க்க போகிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில் மும்பையில் இருக்கும் தாஜ் ஹோட்டலுக்கும் இதே போல் இரண்டு மிரட்டல் இ-மெயில் வந்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தாஜ் குழுமத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர். இதை தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிய மும்பை சைபர் கிரைம் போலீசார் அந்த இ-மெயில் அனுப்பப்பட்ட இன்டர்நெட் இணைப்பை கண்டறிந்துள்ளனர்.
அப்போது அந்த இ-மெயில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து தாஜ் ஹோட்டல்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications