ஓரினச் சேர்க்கை-சிங்கப்பூரில் தமிழருக்கு கசையடி
சிங்கப்பூர்: வேலை பார்க்கப் போன இடத்தில் சிறுவனிடம் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு கைதான தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 கசையடிகளும் தண்டனையாக தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த செல்வராஜு என்பவரின் மகன் ஜெயசெல்வம். 26 வயதாகும் இவர் கடந்த 2007ம் ஆண்டு சிங்கப்பூரில் வேலை கிடைத்து வந்தார்.
பள்ளிகளில் உள்ள ஏர்கூலர்களை பழுது நீக்கும் வேலை செய்து வந்தார்.
கடந்த 2008 ஜூலை மாதம் 1ம்ந் தேதி அவர் ஒரு பள்ளிக் கூடத்துக்கு சென்றபோது, கழிவறையில் 7 வயது சிறுவன் ஒருவனைப் பார்த்து அவனை நிறுத்திப் பேசினார். பின்னர் அந்த சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்.
இதை அந்த சிறுவன் தன் பெற்றோரிடம் கூறவே ஜெயசெல்வம் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் செல்வத்திற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 12 கசையடிகளும் கொடுக்க கோர்ட் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications