Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூசாரிகளுக்கு பென்ஷன் தந்தால் ஆதரவு-விஎச்பி

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: பூசாரிகளுக்கு ரூ. 1000 ஓய்வு ஊதியம் கொடுக்கும் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு தரப்படும் என கிராம கோவில்கள் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் கிராம கோவில்கள் பூசாரிகள் பேரவையின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

தமிழகத்தில் 10 லட்சம் கிராம கோவில்கள் பூசாரிகள் உள்ளனர். இவர்களின் நலனுக்காக தமிழக அரசு தனியாக நல வாரியம் அமைத்தது. ஆனால் இது வரை எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம கோவில்கள் பூசாரிகளுக்கும் அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். பூசாரிகளுக்கு ஓய்வுதியமாக மாதம் ரூ 1000 வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் இறந்த பின்பு அந்த தொகை சம்பந்தப்பட்டவர்களின் மனைவிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்க முன்னுரிமை தர வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கி ஏப்ரல் 16ம் தேதி அன்று திருச்சியில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

அதற்கு முன்பு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+