பாதுகாப்பு வளையப் பகுதியில் மக்கள் மத்தியில் பிரபாகரன்: ராணுவம்
கொழும்பு: மக்கள் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் புகுந்திருப்பதாக ராணுவம் கூறுகிறது. இதையடுத்து அப்பாவி மக்கள் உள்ள பகுதிகளில் அது குண்டு வீசித் தாக்கி வருகிறது.
புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்த கடும் சண்டையில் 400க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளை கொன்று விட்டதாகவும், புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டதாகவும் ராணுவம் நேற்று கூறியது. இருப்பினும் உண்மையிலேயே புதுக்குடியிருப்பு முழுமையாக ராணுவம் வசம் வந்து விட்டதா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இதற்கு முன்பும் கூட சில முறை புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியிருந்துத. ஆனால் அப்பகுதிகளில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், புதுக்குடியிருப்பு கிழக்குப்பகுதியில் தான் பிரபாகரனின் தங்குமிடம் உள்ளது. சிங்கள ராணுவத்தின் 2 படை அணிகள் ஒருங்கிணைந்து வருவதை தெரிந்து கொண்ட பிரபாகரன் கடைசி நிமிடத்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
போவதற்கு முன் அவர் தன் கார்களை தீ வைத்து அழித்து விட்டதாகவும், புகைப்படம், பிறப்புச்சான்றிதழ், ஜாதகம் போன்றவற்றை ஒரு மூட்டையில் கட்டி புதைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
பிரபாகரன் தற்போது மக்கள் பாதுகாப்பு வளையம் பகுதியில் இருப்பதாக சிங்கள ராணுவம் சந்தேகிக்கிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பல்வன் பொக்கணை, இடைக்காடு, மாத்தாளன், இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகள் மக்கள் பாதுகாப்பு வளைய பகுதிகளாக உள்ளன.
92 பேர் பரிதாப பலி
மிகவும் குறுகிய பரப்பளவு கொண்ட இப்பகுதியில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்தப் பகுதியில் நேற்று ராணுவம் கடுமையான வான் எறி குண்டு வீச்சை நடத்தியது.
இந்த கொடும் தாக்குதலில் 30 சிறுவர்கள் உள்பட 92 பேர் பலியானார்கள். பிரபாகரனை குறி வைத்து இன்றும் போர் நிறுத்த பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. மக்கள் பாதுகாப்பு பகுதியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரபாகரன் மகன் சார்லசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அந்த பகுதி மீதும் ஏவுகணைகளை சிங்கள ராணுவம் இடைவிடாமல் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. விடுதலைப்புலிகளை கொல்வதாக கூறி விட்டு, மக்கள் திரண்ட பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் அப்பாவி மக்கள் உயிரிழப்பது அதிகரித்தபடி உள்ளது.
மக்கள் பாதுகாப்பு வளைய பகுதிகளில் சுமார் 3 லட்சம் பேர் சிக்கி உள்ளதாக ஐ.நா. சபை மதிப்பிட்டுள்ளது.
தற்போது இந்தப் பகுதிகளுக்குள் புகுந்து பெரும் தாக்குதலை நடத்த ராணுவம் திட்டமிட்டு வருவதால் மிகப் பெரிய உயிர்ப் படுகொலை நடக்கும் அபாயம் எழுந்துள்ளது.
ராணுவம் இந்தப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினால் லட்சக்கணக்கான தமிழர்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications