மத்திய சென்னையில் மீண்டும் தயாநிதி மாறன்

1966ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சென்னையில் பிறந்த தயாநிதி மாறன், பி.ஏ படித்தவர். தந்தை முரசொலி மாறன், தாயார் மல்லிகா மாறன். மனைவி பிரியா தயாநிதி மாறன். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தந்தையின் மறைவைத் தொடர்ந்து திமுகவில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய தயாநிதி மாறன் 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தல் மூலம் தீவிர அரசியலுக்கு வந்தார்.
மத்திய சென்னை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பின்னர் மத்திய அமைச்சராக உயர்ந்தார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக செயல்பட்டபோது பல சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்தார்.
பி.எஸ்.என்.எல். போன்களை எல்லோரும் சரண்டர் செய்து கொண்டிருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தி பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து பி.எஸ்.என்.எல்லின் சரிவை தடுத்து நிறுத்தியவர்.
மதுரை தினகரன் எரிப்பு, அழகிரியுடன் மோதல், பதவி பறிப்பு என தயாநிதியின் அரசியல் வாழ்க்கை அவரே எதிர்பாராத பல திருப்பங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் பழைய இடத்துக்கு வந்திருக்கிறது.
மீண்டும் மத்திய ஆட்சியில் திமுக இணைந்தால் மறுபடியும் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராவது உறுதி.












Click it and Unblock the Notifications