மதுரையில் 3வது முறையாக களமிறங்கும் மோகன்

எளிதில் பார்க்கலாம், குறைகளைக் கூறலாம், எளிமையானவர் என்று நல்ல பெயர்களை நிறைய வாங்கி வைத்துள்ளார் மதுரை எம்.பி. மோகன்.
இந்த நல்ல பெயர்களே இப்போது மீண்டும் அவரை மதுரை தொகுதி வேட்பாளராக்கியுள்ளது.
தந்தை பெயர் பொன்னுச்சாமி. தாயார் மீனாட்சி அம்மாள். பிறந்தது மதுரை மாவட்டம் சோவந்தானில். தற்போது வசித்து வருவது மதுரை மகபூப்பாளையத்தில்.
பூங்காவனம் என்ற மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
படித்தது பி.ஏ., மதுரை அமெரிக்கன் கல்லூரியில். அரசியல்வாதியாகவும், சமூக சேவகராகவும் இருக்கிறார்.
சிபிஎம் தமிழ் மாநிலக் குழு உறுப்பினராக, மதுரை மாவட்ட செயலக உறுப்பினராக இருக்கிறார்.
1999ம் ஆண்டு முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு மீண்டும் மதுரையிலிருந்து எம்.பி ஆனார்.
தற்போது 3வது முறையாக மதுரையில் நிற்கிறார்.
இவர் சார்ந்த சமூகம் (முக்குலத்தோர்), அதிமுகவுக்கும் ஆதரவான சமூகமாக இருப்பதால் அதிமுக கூட்டணியில் நிற்கும் மோகன், நிச்சயம் வெற்றி பெறுவார் என அதிமுக கூட்டணி கருதுகிறது.
அதேசமயம், வலுவான மு.க.அழகிரி மறுமுனையில் ஆரவாரப் பரிவாரங்களோடு களம நிற்பதால் மோகன் முட்டி மோதித்தான் ஜெயித்தாக வேண்டிய நிலை.












Click it and Unblock the Notifications