For Daily Alerts
Just In
கைதிகளுக்கு ஓட்டுரிமை- மனித உரிமை இயக்கம்
சேலம்: ஜெயில் கைதிகளுக்கும் ஓட்டு போடும் உரிமையை வழங்க வேண்டும் என்று மனித உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது மாநில தலைவர் பூமொழி பேசுகையில்,
ஜனநாயகம் என்று சொல்வது எல்லாரும் சமம் என்பதை குறிப்பதற்கு தான். அப்படி என்றால் ஜெயிலி்ல் இருக்கின்ற ஒருத்தருக்கு தேர்தல்ல நிற்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கின்றது. ஆனால், அங்குள்ள கைதிகளுக்கு ஓட்டுப்போட அனுமதி மறுக்கிறது.
இது என்ன நியாயம். கைதிகளுக்கும் அவர்களுக்கு தபால் மூலம் ஓட்டு போடும் உரிமையை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். அப்படி செய்தால் தான் ஜனநாயகப்படி தேர்தல் நடைபெறுகின்றது என்று அர்த்தம் என்றார்.
Comments
parties அரசியல் தமிழ்நாடு சேலம் கட்சிகள் prisoners tamilnadu election 2009 தேர்தல் 2009 அரசியல்வாதிகள் human rights politicians ஓட்டுரிமை
Story first published: Tuesday, April 7, 2009, 15:15 [IST]