விழுந்து எழுந்த சந்தை!
மும்பை: மஹாவீர் ஜெயந்தி விடுமுறைக்குப் பின் இன்று துவங்கிய பங்கு வர்த்தகம், ஆரம்பத்தில் வீழ்ச்சியைச் சந்தித்தாலும், போகப்போக 'பிக் அப்'பாகி 207 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றது.
முன்னணி நிறுவனப் பங்குகள் அனைத்தும் நல்ல விலையில் கைமாறின.
முன்னதாக வர்த்தகத்தின் ஆரம்ப நிமிடங்களில் 300 புள்ளிகளுக்கும் மேல் இழந்தது சென்செக்ஸ். இன்றும் வழக்கம்போல் நஷ்டம்தானா என முதலீட்டாளர்கள் புலம்ப ஆரம்பிக்கும்போது மீண்டும் சாதக நிலைக்குத் திரும்பியது சென்செக்ஸ்.
வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 10742.34 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை நிப்டி 86 புள்ளிகள் உயர்ந்து 3342.95 புள்ளிகளாகவும் இருந்தது.
ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வோர் பொருள்கள் விற்பனை நிறுவனங்களின் பங்குகள் நல்ல உயர்வு கண்டன.
இதன் மூலம் தொடர்ந்து 5 வது நாளாக இந்திய பங்குச் சந்தை சாதகமான சூழலில் உள்ளது. இதே நிலை எதிர்காலத்திலும் தொடர வாய்ப்புள்ளதாகவும், வரும் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் 21000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயரும் வாய்ப்பு உள்ளதாகவும், அதன் பிறகு மீண்டும் ஒரு பெரும் சரிவு காத்திருப்பதாகவும் பங்கு வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications