For Daily Alerts
Just In
பாதுகாப்பு வளையத்தில் பயங்கர தாக்குதல்-129 தமிழர்கள் படுகொலை
வன்னி: வன்னியில் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று முழுவதும் நடத்திய கொடூரத் தாக்குதலில் 129 அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ட்டில்லரி தாக்குதலில் பொக்கணையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையம் மற்றும் சத்துணவு மையம் முற்றிலும் சேதமடைந்தது. அதில் இருந்த பல குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அங்கு எத்தனை குழந்தைகள் இருந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் 40 முதல் 80 குழந்தைகள் வரை இருந்திருப்பார்கள் என கூறப்படுகிறது.
இதுவரை பாதுகாப்பு வளையப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே மிகக் கொடுமையானது இதுதான் என புலிகள் ஆதரவு இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments
இலங்கை kiran bedi வன்னி genocide இனப்படுகொலை படுகொலை army attack safety zone பாதுகாப்பு வளையம் ராணுவத் தாக்குதல்
Story first published: Thursday, April 9, 2009, 14:39 [IST]