தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி இரு காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாத தமிழக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தினர்.
பிப்ரவரி மாதம் 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்ரமணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது.
ஆனால் இருவரும் இன்னும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.
இதைகண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினார்கள். சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களும் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வக்கீல்களின் இன்றையப் போராட்டம் காரணமாக உயர்நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications