'குறைந்த அளவே பணி நீக்கம் செய்த இந்திய ஐடி நிறுவனங்கள்!'
மும்பை: வேலைவாய்ப்பு அடியோடு குறைந்துவரும் இந்த நாட்களில் இந்தியாவின் முன்னணி ஐடி ஜாம்பவான்களான டிசிஎஸ், இன்போஸிஸ் மற்றும் விப்ரோ மட்டுமே புதிய பணியாளர்களை வாடகைக்கு அமர்த்துகின்றன அல்லது குறைந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றன என்று தகவல் வெளியிட்டுள்ள ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
இவை தவிர, சர்வதேச நிறுவனங்களில் பிரிட்டனின் டெஸ்கோ, ஃபின்லாந்து மொபைல் நிறுவனம் நோக்கியா, பிரிட்டனின் மெட்ரோ ஏஜி, மெக்ஸிகோவின் ஃபெஸ்மா மற்றும் பிரான்ஸின் வியோலியா என்விரான்மெண்ட் போன்றவையும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.
இன்றைக்கு புதிய வேலை கிடைப்பதே அரிதாக உள்ளது. இந்தத் தருணத்திலும், மேற்கண்ட நிறுவனங்கள் மட்டும் குறைவான பணியாளர்களைத்தான் வேலையை விட்டு நிறுத்தியுள்ளன. அல்லது புதிய பணியாளர்களை வாடகை அடிப்படையில் பணியமர்த்தி வருகின்றன, என்கிறது இந்தப் பத்திரிகை.
போர்ப்ஸ் கணக்கெடுப்பின்படி டிசிஎஸ்ஸில் 130000 பணியாளர்களும், விப்ரோவில் 97000 ஊழியர்களும், இன்போசிஸ்ஸிஸ் 103000 பணியாளர்களும் உள்ளனர்.
பிரிட்டனில் குறைத்த டிசிஎஸ்!:
இதற்கிடையே டிசிஎஸ் நிறுவனம் தனது பிரிட்டன் அலுவலகத்தின் மொத்தப் பணியாளர்களில் 10 சதவிகிதத்தைக் குறைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் டிசிஎஸ்ஸின் பல்வேறு கிளைகளில் 5000 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 500 பேர் நீக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு சமீபத்தில் 54.7 மில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய வேலைக்கான ஆர்டர் ஒன்றினை பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications