'எம்எல்ஏ': தமிழ்ப் புத்தாண்டில் ராஜினாமா-எஸ்வி.சேகர்
ராமேஸ்வரம்: தமிழ் புத்தண்டு அன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போவதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ராமேஸ்வரத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
பிராமணர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
வருண்காந்தி பேசியது தவறு என்றால் அதே போன்று லாலு பேசியதும் தவறு தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. இழுபறிதான் நீடிக்கும். பிராமணர்களுக்கு ஆதரவு தரும் கட்சியை நாங்கள் ஆதரிப்போம்.
நான் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்தேன். ஆனால் அவர்கள் தான் என்னை புறக்கணித்தனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.
திருமங்கலத்தில் இடைத் தேர்தலில் தொகுதி மக்களுக்கு கிடைத்து போல் எனது தொகுதி மக்களுக்கும் கிடைக்கட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications