மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா - ஏப். 26ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
மதுரை: புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரையின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது சித்திரைத் திருவிழா. மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் சார்பில் நடைபெறும் இந்தத் திருவிழா, சைவ, வைணவ நல்லிணக்கத்திற்கு சிறந்த சான்றாக கருதப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் விளங்குகிறது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது அழகர் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சம்.
வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு முன்னதாக 25-ந்தேதி வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது.
கொடியேற்றத்தை தொடர்ந்து மே6-ந்தேதி வரை தினமும் விழா நாட்களில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மே-3ந்தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந்தேதி திக் விஜயமும், 5-ந்தேதி திருக்கல்யாண வைபமும் நடைபெறுகிறது.
அன்றைய தினம் இரவு மீனாட் அயம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளுதலும், 6-ந்தேதி காலை தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.