பாஜகவுடன் பேசவில்லை-அத்வானிக்கு ஜெ மறுப்பு
சென்னை: பாஜகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக நான் அக்கட்சியுடன் பேசியதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியிலும், தன்னுடன் கேரளா வந்த நிருபர்களிடமும் பேசிய பாஜக தலைவர் அத்வானி, தேர்தலுக்குப் பின்னர் பாஜக கூட்டணிக்கு அதிமுக ஆதரவு தரும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதொடர்பாக பின்னணி முயற்சிகள் நடந்து வருகின்றன. அதிமுகவுடன் பேசி வருகிறோம் என்று கூறியிருந்தார்.
இதனால் ஜெயலலிதாவை மூன்றாவது அணியில் சேர்த்த மற்ற கட்சிகள் அதிர்ந்து போயுள்ளன. இந் நிலையில் அத்வானியின் கூற்றை ஜெயலலிதா மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவை பொருத்தமட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.
எந்த அரசியல் கட்சியுடனும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்துக் கொள்வதற்கான எந்தவித பேச்சுவார்த்தையும் அதிமுக சார்பில் நடத்தவில்லை.
இத்தகைய செய்திகள் அடிப்படையற்றது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அப்ப சொல்றது யாரு உண்மை...?












Click it and Unblock the Notifications