தலைமறைவான காந்தமால் பாஜக வேட்பாளர் கைது
புவனேஸ்வர்: கிறிஸ்தவர்களை எச்சரிக்கும் வகையில் பேசி விட்டு தலைமறைவான பாஜகவின் காந்தமால் வேட்பாளர் அசோக் சாகு கைது செய்யப்பட்டார்.
சர்ச்சைக்குரிய ஒரிசா மாநிலம் காந்தமால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் சாகு. ஏப்ரல் 5ம் தேதியன்று அவர் ராய்கியா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில், கிறிஸ்தவர்களை எச்சரிக்கும் வகையில் விஷமமாக அவர் பேசினார்.
இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவரைக் கைது செய்ய தேடி வந்தனர். நயாகார் மாவட்டத்தில் அவர் ஒரு வீட்டில் இருந்தபோது அங்கு போலீஸார் சென்றனர். ஆனால் கையில் வாரண்ட் இல்லாததால் சாகுவைக் கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் சாகு தப்பி தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று காலை அவர் பூல்பானி நகரில் கைது செய்யப்பட்டார்.
சாகு ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆவார். சாகு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications