விழுப்புரம் அதிமுக வேட்பாளரான 'மாஜி' ஆனந்தன்
ஜெயலலிதாவின் முதலாவது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் ஆனந்தன்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள நத்தாமூரைச் சேர்ந்தவர்.
59 வயதாகும் ஆனந்தன், 1984ம் ஆண்டு உளுந்தூர்ப்பேட்டை சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருந்தார்.
பின்னர் 1991ம் ஆண்டு மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். அப்போது ஆட்சி அமைத்த ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்று 95 வரை கால்நடை, பால்வளம் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
பி.எஸ்.சி படித்துள்ள ஆனந்தன் இந்த முறையும் சீட் எதிர்பார்த்திருந்தார். இருப்பினும் அவருக்குப் பதில் முருகனை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா.
ஆனால் எதிர்பாராதவிமாக முருகன் விஷயத்தில் ஏகப்பட்ட கசமுசாக்கள் இருந்ததால், அவரை தூக்கி விட்டு ஆனந்தனை வேட்பாளராக்கி விட்டார் ஜெயலலிதா.
எம்.எல்.ஏவாக இருமுறை இருந்த ஆனந்தன், எம்.பி ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.