கன்னியாகுமரி கடற்கரையில் கேரளாவைச் சேர்ந்த தாய் - மகள் தற்கொலை முயற்சி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மணல்தேரி சிலுவை நகர் கடற்கரையில் நேற்று காலை தாயும், மகளும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தனர். அவர்களை பார்த்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சுயநினைவின்றி இருக்கும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 35 வயது மதிக்கத்தக்க தாய் நீலகலரில் பூப்போட்ட சேலையும், நீலகலர் ரவிக்கையும் அணிந்துள்ளார். மகளுக்கு 13 வயது இருக்கும். பிரவுன், மஞ்சள் கலந்த சுடிதார் அணிந்து இருந்தார்.
அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வைத்திருந்த பையில் மலையாளத்தில் எழுதப்பட்ட கடிதமும், விவாகரத்து வக்கீல் நோட்டிஸும் இருந்தது.
கீதா, க.பெ.சுரேஷ் என்ற பெயர் அதில் இருந்தது. அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.
விவாகரத்து காரணமாக அந்த பெண் இங்கே வந்து மகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications